
திருமலை: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.