
சென்னை: குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, டேவிட் மனோகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் மழை காலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாததும், குப்பைகளை கொட்டும் இடங்களாக மாற்றியிருப்பதும் முக்கிய காரணம். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லை.