
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்றில் நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
காசோலை மோசடி வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகு புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால் சிறை தண்டனையை தவிர்க்கலாம். இரு தரப்பினர் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால், என்ஐ சட்டத்தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்பட்ட தண்டனை ரத்தாகிவிடும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.