
சென்னை: ‘அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக முதல்வர் நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார்’ என்று பாஜகவினரின் விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: “தெருநாய் பிரச்சினை குறித்தும் தெருநாய்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிராணிகள் நல ஆர்வலர்கள் கூறுவது குறித்தும் கேட்கிறீர்கள். இதற்கான தீர்வு மிகவும் சுலபம்.