
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகையில், “ மாநிலத்தின் வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செப்டம்பர் 7 வரை மூடப்படுகிறது. உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்றார்.