• September 4, 2025
  • NewsEditor
  • 0

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகை​யில், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் செப்​டம்​பர் 7 வரை மூடப்​படு​கிறது. உள்​ளூர் நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தலை அனை​வரும் கண்​டிப்​பாக பின்​பற்ற வேண்​டும் என கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள்’’ என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *