• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திரு​வள்​ளூரில் 7 ஆண்​டு​களாக வழிப்​பறி கொள்​ளை​யரை கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்​டிக்கு ரூ. 4 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, இது​போன்ற வழக்​கு​களில் இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கு​வது தொடர்​பாக தமிழக அரசும் அரசாணை​யில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

திரு​வள்​ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனி​யுடன் மருத்​துவ பரிசோதனைக்​காக சாலை​யில் நடந்து சென்​றுள்​ளார். அப்​போது அவர்​களை அழைத்த ஒரு கும்​பல், இப்​பகு​தி​யில் வழிப்​பறி திருடர்​கள் இருப்​ப​தால் அணிந்​துள்ள தாலிச்​செ​யின், வளை​யல், மோதிரம் உள்​ளி்ட்ட நகைகளை பத்​திர​மாக கழட்டி பேக்​கில் வைத்​துக்​கொள்​ளுங்​கள் என அறி​வுரை கூறி​யுள்​ளனர். அவர்​களை மாறு​வேடத்​தில் இருக்​கும் போலீ​ஸார் என நினைத்த கிருஷ்ணவேணி தனது 17.5 பவுன் நகைகளை கழட்டி பேக்​கில் வைத்த மறுநிமிடம் மற்​றொரு கும்​பல் அந்த நகைகளை கொள்​ளை​யடித்து தப்​பியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *