
புதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறுபான்மையினர் பலர் இந்தியாவில் தஞ்சமடைய வருகின்றனர். அந்த நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களால் அவர்கள் இப்படி இந்தியாவுக்குள் வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கூறிய 6 மதச் சிறுபான்மையினர், அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியாவுக்குள் வந்திருந்தால், அவர்கள் தொடர்ந்து இங்கு தங்கலாம். அவர்களுடைய பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் காலாவதியாகி இருந்தாலும், 6 மதச் சிறுபான்மையினர் இந்தியாவில் தங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாது.