
சென்னை: பிரதமரின் மறைந்த தாய் குறித்த அவதூறு கருத்துக்கு பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமர் மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.