
பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32), துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக‌ கடந்த மார்ச்சில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 2.8 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.2.4 கோடி ரொக்கமும் சிக்கியது. இவ்வழக்கில் ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலையில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே ரன்யா ராவிடம் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் 46 முறை துபாய், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றது தெரியவந்தது.