
திருவாரூர்: ‘மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மனித குலத்தின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும்’ என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், தமிழக அமைச்சர்கள் கோவி.செழியன், கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார்.