
நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், சாதாரண மக்களின் முக்கியத் தேவைப் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது.
இன்னொரு பக்கம், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ‘பாவப் பொருட்கள்’ என்று அழைக்கப்படுகிற பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியல் இதோ:
-
1200 சி.சி-க்கு அதிகமாக இருக்கும் பெட்ரோல் கார்கள்,
-
1500 சி.சி-க்கு அதிகமாக இருக்கும் டீசல் கார்கள்,
-
350 சி.சி-க்கு அதிகமாக இருக்கும் மோட்டார் சைக்கிள்கள்,
-
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக வாங்கப்படும் படகுகள் மற்றும் பிற கப்பல்கள்,
பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி,
சர்க்கரை அல்லது இனிப்புப் பொருள் சேர்க்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள்,
சுவைப் பானங்கள்,
காஃபின் கலந்த பானங்கள்.
இந்தப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி வருகிற செப்டம்பர் 22-ம் தேதி முதல் 40 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4