• September 4, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப். 1-ம் தேதி வரை வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடை​பெற்​றது. இந்​நிலை​யில் தர்​பங்கா நகரில் அண்​மை​யில் இந்த யாத்​திரை​யின்​போது எதிர்க்கட்​சிகளின் ஒரு மேடை​யில், பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசப்​பட்​டது. காங்​கிரஸ் தொண்​டர்​களின் இந்​தப் பேச்​சுக்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் பிரதமர் மோடி மற்​றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசி​யதற்கு எதி​ராக பிஹாரில் இன்று மாநிலம் தழு​விய முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ஆளும் என்​டிஏ கூட்​டணி அழைப்பு விடுத்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *