
பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப். 1-ம் தேதி வரை வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. இந்நிலையில் தர்பங்கா நகரில் அண்மையில் இந்த யாத்திரையின்போது எதிர்க்கட்சிகளின் ஒரு மேடையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்களின் இந்தப் பேச்சுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசியதற்கு எதிராக பிஹாரில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆளும் என்டிஏ கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.