• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர் சிறுநீரக பாதிப்​பால் அவதிப்​பட்டு வந்த நிலை​யில், அவரது குடும்ப நண்​ப​ரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்​பவர், தனது கிட்​னியை தானம் அளிக்க முன்​வந்​துள்​ளார்.

இதற்​காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான அங்​கீ​காரக் குழு​விடம் விண்​ணப்​பிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக ஈரோடு மாவட்ட ஆட்​சி​யர் அளித்த அறிக்​கை​யில் கணேசனும், பெரிய​சாமி​யும் குடும்ப நண்​பர்​கள் என்​பதை நிரூபிக்க எந்த ஆவண, ஆதா​ரங்​களும் சமர்ப்​பிக்​கப்​பட​வில்லை என்று தெரி​வித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பெரிய​சாமி வழக்கு தொடர்ந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *