
சென்னை: குடும்ப நண்பரின் கிட்னியை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த வி.பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்ப நண்பரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்பவர், தனது கிட்னியை தானம் அளிக்க முன்வந்துள்ளார்.
இதற்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில் கணேசனும், பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆவண, ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி வழக்கு தொடர்ந்தார்.