
சென்னை: டெல்லியில் பாஜக உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் நெருங்குவதால் உட்கட்சி பூசல்களை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல், கூட்டணி ஒருங்கிணைப்பு, 2026 சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய டெல்லியில் உயர்மட்டக் குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமத் ஷா வீட்டில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எல்.முருகன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.