• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டெல்​லி​யில் பாஜக உயர்​மட்ட குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேர்​தல் நெருங்​கு​வ​தால் உட்​கட்சி பூசல்​களை உடனடி​யாக களைய வேண்​டும் என்று தமிழக பாஜக தலை​வர்​களுக்கு அமித் ஷா அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக பாஜக​வில் உட்​கட்சி பூசல், கூட்​டணி ஒருங்​கிணைப்​பு, 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து ஆராய டெல்​லி​யில் உயர்​மட்​டக் குழுக் கூட்​டம் உள்​துறை அமைச்​சர் அமத் ஷா வீட்​டில் நேற்று நடை​பெற்​றது.

இதில் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மாநில பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, எல்​.​முரு​கன், வானதி சீனி​வாசன், சரஸ்​வ​தி, நாராயணன் திருப்​பதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை பங்​கேற்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *