• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும் நாளை​யும் (செப். 4 மற்​றும் 5) ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. 

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் செப். 2-ம் தேதி (செவ்​வாய்க்​கிழமை) மழை பெய்​துள்​ளது. குறிப்​பாக, வேலூரில் 11 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும், நாளை​யும் மித​மான மழை பெய்​யக்​கூடும். அதே​போல, வரும் 6, 7-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *