
மதுரை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. ஊழல் பணத்தை தொழிலில் முதலீடு செய்யவே அவர் வெளிநாடு சென்றுள்ளார்” என மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்ட பிரச்சார பயணத்தின் 3-வது நாளான இன்று மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்ததில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது: “மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.