
‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ‘அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். இது பணியில் இருக்கும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, “ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒருபோதும் இடையூறு செய்யாது. முடிந்தவரை அரசு ஆசிரியர்களுக்கு உதவிதான் செய்யும். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் ‘ஆசிரியர்களை அரசு கைவிடாது’ என்று உறுதியளித்திருக்கிறார். கல்வி அமைச்சர், முதல்வர் கலந்து பேசி நல்ல தீர்வை ஆசிரியர்களுக்கு வழங்குவார்கள்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs