
புதுடெல்லி: நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் கரேகுட்டா மலைப்பகுதியில் ஆபரேஷன் ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப்பாதுகாப்புப் படையினர், கோப்ரா வீரர்கள் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார்.