
அரூர்: கடத்தூரில் மாணவிகளுக்கு தொல்லை தரும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர கடத்தூரில் இருந்து தருமபுரி, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயில என தினசரி நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தூர் வழியாக செல்கின்றனர். இவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி வரும் இளைஞர்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.