• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக பிரபல மருந்து நிறுவன உரிமை​யாளர் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். சென்​னை​யில் வசிக்​கும் வட மாநிலத்​தைச் சேர்ந்த பிரபல மருந்து நிறுவன உரிமை​யாளர், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தொடர்​பான புகாரின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சம்​பந்​தப்​பட்ட மருந்து நிறுவன உரிமை​யாளர் தொடர்​புடைய சுமார் 10 இடங்​களில் அடுத்​தடுத்து திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அந்த வகை​யில், புரசை​வாக்​கத்​தில் உள்ள அவரின் வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு 2 வாக​னங்​களில் விரைந்த 8 அதி​காரி​கள், துப்பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் சோதனை மேற்​ கொண்​டனர். இதே​போல், அவருக்​குச் சொந்​த​மாக அம்​பத்​தூரில் உள்ள மருந்து நிறுவன தொழிற்​சாலை​யிலும் சோதனை நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *