
சென்னை: தமிழகத்தில் நேரடி போட்டித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க அரசுக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதி பெற்ற ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் நிரப்ப கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.