
விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டு தற்போது விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.