
சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறைதான் மிகவும் அவசிய தேவை என்று ஆசிய ஊடகவியல் கல்லூரியில் நடைபெற்ற இதழியல் பயிற்சி பயிலரங்கில் மூத்த பத்திரிகையாளர் எஸ்.சாய்நாத் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான மையம், சென்னை சமூக பணி கல்லூரி, ஆசிய ஊடகவியல் கல்லூரி சார்பில் பத்திரிகை மற்றும் சமூகத் தொடர்பு குறித்து இதழியல் மாணவ-மாணவிகளுக்கு 2 வாரம் காலம் பயிற்சி பயிலரங்கம் நடத்தப்பட்டது.