
புதுடெல்லி: என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தாய்மாருக்கும் அவமானம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்று வருகிறது. இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், தர்பங்கா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பேரணியின்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.