
திருச்சி: 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஸ், கீதா ஜீவன் ஆகியோர் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.