• September 3, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

மக்களே,

மனிதனை மிகவும் மோசமாக நம்பி கெட்ட ஒரு உயிரினம் என்றால் அது நாய்கள் தான்.

காட்டில் அதன் போக்கில் வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த நாய்களை தன் தேவைக்கு ஏற்ப பழக்கி, தன் காவல் தேவைக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தி கொண்டிருந்தான்.

தான் சமைத்த உணவை மட்டும் அதற்க்கு கொடுத்து அதை மட்டுமே நம்பி வாழும்படி அதை மாற்றி விட்டான்.

நாய்கள் அதை மட்டுமே நம்பி அவற்றின் வேட்டையாடும் இயல்பை தொலைடித்துவிட்டன. மறந்தும் விட்டன.

வாலாட்டி வாலாட்டி மனிதனை சந்தோஷப்படுத்தி தன் உணவை பெற நன்றி யாய், பாசமாய் இருந்து பழகிவிட்டன.

மனிதனே தன்னை காப்பாற்ற வந்த தேவ தூதனாய் துதிக்க தொடங்கின.

மனிதனின் தேவைகள் மாற மாற அவனுக்கு நாய்களின் தேவை குறைய தொடங்கியது.

தேவையற்றதாய் போனதால் தெருவில் விடப்பட்டன.

தெருவில் விடப்பட்டதால் அவற்றை கவனிக்க யாருமில்லை. உணவுக்கு வழியில்லை உயிருக்கு பாதுகாப்பில்லை.

மனிதனையே நம்பி இருந்ததால் தான் உணவை தானே தேட தெரியவில்லை.

இப்படி மனிதனை நம்பி மோசம் போன நாய்கள் இன்று மனிதனுக்கு தொந்தரவாய் போனது.

இந்த நிலையில் நாய்களை  அப்புறப்படுத்தினால் அவை உயிர் வாழ என்ன வழி? அவற்றின் உணவுக்கு எதாவது வழி செய்து பிறகு நாய்களை அப்புறப்படுதலாம்.

நம் வீடுகளில் வரும் பாம்புகளை நாம் பிடித்து காட்டில் விடுகிறோம். அவை அங்கு மற்ற உயிர்களை உண்டு வாழும். ஆனால் நாய்கள் காட்டில் என்ன செய்யும், எப்படி வாழும்?

கோ. ஸ்ரீதர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *