• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜ் நிர்வாகத்தை கலைத்து, சமாஜத்தின் இடைக்கால நிர்வாகிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா கோயிலை அகில இந்திய சாய் சமாஜம் நிர்வகித்து வருகிறது. இந்த சமாஜத்துக்கு சொந்தமாக பள்ளி, கடைகள் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன. சமாஜத்தின் நிர்வாக குளறுபடி, முறைகேடு தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *