
புதுடெல்லி: அமெரிக்காவின் வரி உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்) சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை பாஜக தொடங்கவுள்ளது.
பாஜக சார்பில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்களுக்கு இந்தப் பிரச்சாரம் நடைபெறும். இந்தப் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சுதேசி நோக்குள்ள திட்டங்கள், ஆத்ம சுயசார்பு திட்டங்கள் குறித்த விளக்கங்கள் இடம்பெறும்.