
புதுடெல்லி: ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்படும் ஒருவரை ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்து அவர்களுக்கு அம்மாவட்ட எஸ்.பி. விருது வழங்கி வருகிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) இருப்பவர் எம்.அர்ஷி.
இவர் இந்த வார சிறந்த காவலர் (police man of the week) எனும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன்படி சிம்டேகா மாவட்ட போலீஸாரில் சிறப்பாக செயல்படும் ஒருவரை ஒவ்வொரு வாரமும் தேர்வுசெய்கிறார். பிறகு அவருக்கு ‘இந்த வார சிறந்த காவலர்’ விருது வழங்கி கவுரவிக்கிறார்.