
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மைசூருவில் அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தின் வைர விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, மத்திய சுகாதார இணை அமைச்சர் அனுபிரியா படேல், கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், பாஜக எம்.பி. யதுவீர் வாடியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் முதல்வர் சித்தராமையா கன்னடத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையை தொடங்கியதும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பார்த்து சிரித்தவாறு, “உங்களுக்கு கன்னடம் தெரியுமா?” என வினவினார். அதற்கு அவர், த‌னக்கு கன்னடம் தெரியாது என்பதை போல தலையசைத்தார். இதனால் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.