• September 3, 2025
  • NewsEditor
  • 0

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் உள்ள மைசூரு​வில் அகில இந்​திய பேச்சு மற்​றும் செவித்​திறன் நிறு​வனத்​தின் வைர விழா நேற்று நடைபெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், முதல்​வர் சித்​த​ராமை​யா, மத்திய சுகா​தார இணை அமைச்​சர் அனுபிரியா படேல், கர்​நாடக சுகா​தார அமைச்​சர் தினேஷ் குண்டு ராவ், பாஜக எம்​.பி. யது​வீர் வாடியார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

விழா​வில் முதல்​வர் சித்​த​ராமையா கன்​னடத்​தில் உரை​யாற்​றி​னார். அவர் தனது உரையை தொடங்​கியதும், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை பார்த்து சிரித்​த​வாறு, “உங்​களுக்கு கன்​னடம் தெரி​யு​மா?” என வின​வி​னார். அதற்கு அவர், த‌னக்கு கன்​னடம் தெரி​யாது என்​பதை போல தலை​யசைத்​தார். இதனால் அரங்​கில் சிரிப்​பொலி எழுந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *