
சென்னை: சென்னையில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த இறப்புக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 8, வார்டு 106-க்கு உட்பட்ட வீரபாண்டி நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் சரியாக மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.