
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால், தற்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணை, அப்போதைய ஆட்சியாளர்களால் கமிஷன் பெறப்பட்டு, தரமின்றி கட்டப்பட்டதாக தற்போதைய காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருவதோடு, இதற்காக சிபிஐ விசாரணை தேவை என்றும் முடிவு செய்துள்ளது.