
சென்னை: தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் சுயசான்று அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் உடனடி ஒப்புதல் பெறும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.