
சிவகாசி: பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தரகர்களை அணுக வேண்டாம். அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டால் பிரச்சினை இன்றி கடவுச்சீட்டு வழங்குவது எங்கள் கடமை. ஆன்லைனில் விண்ணப்பித்தால் கடவுச்சீட்டு வீடு தேடி வரும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கூறியுள்ளார்.
சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரு நாட்கள் மொபைல் பாஸ்போர்ட் சேவை முகாம் தொடங்கியது. இதில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கலந்து கொண்டு, விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கினார்.