
தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்திணை- தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின்கீழ், கால்நடை வளர்ப்பு மூலம் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்னோடித் திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்துடன் (டானுவாஸ்) இணைந்து பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 1,000 பழங்குடியின குடும்பங்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம் பெண்கள், சுய உதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.