
கோவில்பட்டி: எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம் அருகே இனாம் அருணாச்சலபுரத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை நிர்வாகியின் உறவினர் கந்தசாமி என்பவர் உயிரிழந்தார். ஏற்கெனவே, மானாவாரி விவசாய நிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்பகுதியில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.