
விழுப்புரம்: பாமக சார்பில், ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பிரச்சார பயணம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் செஞ்சியில் நேற்று இரவு நடைபெற்றது. பிரச்சார பயணத்துக்கு தலைமையேற்ற பாமக தலைவர் அன்புமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி.
4 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரையில் பாதுகாப்பு இல்லை. கட்சி, ஜாதி, மதம் என பார்க்காமல், பிள்ளைகள் மற்றும் நம் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். போதை பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகி உள்ளனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களை காப்பாற்ற முடியாது.