• September 2, 2025
  • NewsEditor
  • 0

பூந்தமல்லி: “தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியின் இறுதிக் கட்ட பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, பணிகளை துரிதமாக முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார் அமைச்சர் சேகர்பாபு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *