
சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பி.தாமஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.