
சென்னை: ஓய்வு பெற்றவர்களுக்கான 15 மாத ஓய்வுக்கால பணப்பலன்களை தீபாவளிக்குள் வழங்குவது குறித்து, அமைச்சர் நல்ல பதில் சொன்னால் போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவு பெறும் என, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கூறினார்.
தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்ற 3,500 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்கள், பணியில் உள்ளவர்களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்பந்த நிலுவை தொகை மற்றும் 12 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்.