• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்​தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்​பில், சிறந்த பெண் குழந்​தைக்​கான விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யுடன் வழங்​கப்​பட்டு வருகிறது.

இவ்​விருதுக்கு பிற பெண் குழந்​தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலா​ளர் ஒழிப்​பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்​தல், பெண்​களுக்கு எதி​ரான சமூக அவலங்​களுக்கு தீர்வு காண ஓவி​யங்​கள், கவிதைகள், கட்​டுரைகள் மூலம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​துதல், ஆண்​கள் மட்​டுமே சாதிக்க முடி​யும் என்​பதை போன்ற செயல்​களை பெண்​களாலும் சாதிக்க முடி​யும் என்று சாதித்​திருத்​தல் போன்ற தகு​தி​களை உடைய பெண் குழந்​தைகள் விண்​ணப்​பிக்க தகுதி பெற்​றவர்​கள் ஆவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *