
மதுரை: குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்து ஜாமீன் வழங்கக்கோரி திருமலைச்சாமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திருமலைச்சாமி மீது புகார் அளித்த பட்டியலின பெண் நேரில் ஆஜராகி அவருக்கு ஜாமீன் வழங்கினால், அவர் வீடு அருகே இருக்கும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் செல்லும் போது மீண்டும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவித்தார்.