
மதுரை: குற்ற வழக்கில் தொடர்புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும், அந்த இடத்தில் தன்னை நியமிக்க வேண்டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான், மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.
இதுகுறித்து அளித்த மனு: மதுரை ஆதீன மடத்தின் தம்புரானாக குருமகா சந்நிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று, கடந்த 2018 ஜூலை முதல் பணியாற்றி வருகிறேன். தற்போது, 293-வது ஆதீனத்தின் கீழ் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன்.