
மதுரை: திருச்சி அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூரில் பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.