• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் செப்​.7-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

வடக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் செப்​.2-ம் தேதி (இன்​று) காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்​றும், நாளை​யும் வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். செப்.4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *