
கவுஹாத்தி: இந்திய தேசத்தின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டால் எந்த சிக்கலும் இல்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தெற்கு அசாம் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வில் திங்கட்கிழமை அன்று அவர் பங்கேற்றார். இந்த மாவட்டம் 2024 நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை கரீம்கஞ்ச் என அறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும், இந்த மாவட்டம் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.