• September 1, 2025
  • NewsEditor
  • 0

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணி சிந்துப்பாத்தியில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அதிகம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த உள்நாட்டு போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். பலர் காயமடைந்தனர். உள்நாட்டு போரின்போது 1998-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற ராணுவ வீரர் ஒருவரால் யாழ்ப்பாணம் மாவட்டம் செம்மணி என்ற இடம் மனித புதைகுழி என முதன்முதலாய் அம்பலப்படுத்தப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *