
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை மீட்கவும், பாதுகாக்கவும் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை முறையாக மீட்டு பராமரிக்கவும், கோயிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறியிருந்தார்.