• September 1, 2025
  • NewsEditor
  • 0

‘அதிமுக’வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கிடையேயான அதிகாரப்போட்டி முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ‘அதிமுக’ வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

சமீபத்தில் வி.கே.சசிகலா, “தமிழக மக்களின் நலன் காக்க, கழக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு.

ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்” என்று அறிக்கை விட்டிருந்தார்.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

தற்போது இதுகுறித்துப் பேசியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், “மாண்புமிகு சின்னம்மா வி.கே.சசிகலா அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் என்னோட ஆசையும், அதைத்தான் தொடர்ந்து பேசிவருகிறேன். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்” என்று பேசியிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசியவர், “விஜய் இப்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். களத்தில் இறங்கி செயல்படும்போதுதான் அவரது அரசியல் எதிர்காலத்தை கணிக்க முடியும். மக்களிடம் வரவேற்புக் கிடைத்து அவர் முதலில் தொகுதிகளில் வென்று காட்டவேண்டும். கூட்டணி என்பது அவரது அரசியல் செயல்பாட்டைப் பொறுத்துதான். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *