• September 1, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அமீபா பாதிப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா பாதிப்புக்கு சிகிச்சையில் இருந்த மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *